வேண்டல்…
விழிகள் மூடினகனவுகள் தோன்றின
தாய் மடியில் தலைவைத்தேன்
தந்தை தோள் சாய்ந்தேன்
தமக்கை கரம் பற்றி நடந்தேன்
பாட்டியிடம் கதை கேட்டேன்
விழிகள் திறந்தன
நனவுகள் புரிந்தன
உன்னிடம் வேண்டினேன்
இறைவா!
அடுத்த ஜென்மத்திலாவது
இந்தக் கனவுகள்
நிறைவேறுமா?
-அழகை மைந்தன்
Labels: கவிதை


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home